ஆர்ஜன்டினாவில் நடைபெறுகிறது 47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

ஆர்ஜன்டினாவில் நடைபெறுகிறது 47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி

47ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூன் 12ம் திகதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது.

தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கோபா அமெரிக்க கால்பந்து ஆகும். உலக கிண்ணம், ஐரோப்பிய கிண்ணத்துக்கு அடுத்து புகழ் பெற்றது இந்த போட்டி ஆகும்.

47ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூன் 12ம் திகதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோபா அமெரிக்க கால்பந்து போட்டி ஆர்ஜன்டினாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14 முதல் ஜூலை 11ம் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது.

ஆர்ஜென்டினாவுடன் இணைந்து கொலம்பியாவும் இந்த போட்டியை நடத்தும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது போட்டியை நடத்தும் வாய்ப்பை கொலம்பியா இழந்துள்ளது. அர்ஜென்டினா மட்டுமே இந்த போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பெரு, வெனிசுலா ஆகிய நாடுகளும், ‘பி’ பிரிவில் ஆர்ஜன்டினா, சிலி, பொலிவியா, உருகுவே, பராகுவே ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் 2 பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதிபெறும்.

29ம் திகதியுடன் லீக் ஆட்டம் முடிகிறது. ஜூலை 3 மற்றும் 4ம் திகதிகளில் கால் இறுதியும், 6 மற்றும் 7ம் திகதியில் அரை இறுதியும், ஜூலை 11ம் திகதி இறுதிப் போட்டி நடக்கிறது.

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் உருகுவே அதிகபட்சமாக 15 முறை சம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி கடைசியாக 2011 ல் வெற்றி பெற்றது.

அதற்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா 14 தடவை கோபா அமெரிக்க கிண்ணத்தை கைப்பற்றியது. அந்த அணி கடைசியாக 1993 ல் வெற்றி பெற்றது.

பிரேசில் 9 முறை சம்பியன் பட்டம் பெற்றுள்ளது. பராகுவே, சிலி, பெரு ஆகியவை தலா 2 முறையும், கொலம்பியா, பொலிவியா தலா 1 முறையும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.

No comments:

Post a Comment