வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுபது பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுபது பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறுபது (60) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டுள்ள மருதநகர் கிராமத்தில் தனிப்படுத்தலில் இருந்தவர்களிடம் மேலெழுந்தவாரியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முப்பது (30) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கியவர்கள் (30) பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளுமாக அறுபது (60) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகரித்து வருவதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment