இந்திய கிரிக்கெட் அணி வெள்ளை பந்து தொடர்களில் பங்கெடுப்பதாற்காக எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த சீசனின் பிற்பகுதியில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு பயணிக்கும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி உறுதிபடுத்தியுள்ளார்.
எனினும் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் துணைத் தலைவர் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இரண்டாம் தர இந்திய அணியே இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இலங்கையுடனான சுற்றுப் பயணத்திலிருந்து விலகியுள்ளனர்.
No comments:
Post a Comment