ஸ்வர்ணமஹால் வைப்பாளருக்கு இன்று முதல் நஷ்டஈடு - மக்கள் வங்கி கிளைகளில் பெற ஏற்பாடு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

ஸ்வர்ணமஹால் வைப்பாளருக்கு இன்று முதல் நஷ்டஈடு - மக்கள் வங்கி கிளைகளில் பெற ஏற்பாடு

ஸ்வர்ணமஹால் பினான்ஸியல் சேர்விசர்ஸ் பி.எல்.சி நிறுவனம் தகைமையுடைய வைப்பாளருக்கும் சட்ட ரீதியான பயன் பெறுநர்களுக்கும் இன்று (10) முதல் இழப்பீட்டுத் தொகையை வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க, உரிய வைப்புக்களின் தகைமையுடைய வைப்பாளர்கள், தொடர்புடைய சட்ட ரீதியான பயன் பெறுநர்கள் தொடக்கம் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலிருந்தும் தங்கள் உரிமை கோரல்களை பெற்றுக் கொள்ள முடியும். 

மக்கள் வங்கி வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் இதற்காக ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும், சுகாதார வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக இணங்கிச் செயற்படுமாறும் தகைமையுடைய வைப்பாளர்கள், தொடர்புடைய சட்ட ரீதியான பயன் பெறுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலதிக விசாரணைகளுக்கு, 0112477261/ 0112398788 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment