2 ஆவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) டி-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாங்கள் தற்போது, இந்த ஆண்டின் எல்.பி.எல். தொடரை நடத்த பொருத்தமான காலத்தை கண்டுபிடித்துள்ளோம். போட்டியின் பிற விவரங்களை இறுதி செய்வதில் தற்சயம் ஈடுபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் மேலாண்மைக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா கூறியுள்ளார்.
எல்.பி.எல்.லின் முதல் பதிப்பு சர்வதேச வீரர்களின் பங்களிப்புடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
மொத்தமாக 05 அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்றதுடன், திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் ஆனது.
இந் ஸ்ரீநிலையில் இரண்டாவது தொடரின் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் நாட்டின் சுகாதார நிலைமையை அறிந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் சுகாதார அமைச்சகத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ளும்.
No comments:
Post a Comment