கொலை குற்றச்சாட்டு சுமத்துவதா? - சென்னை உயர் நீதிமன்ற கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் மேல் முறையீடு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

கொலை குற்றச்சாட்டு சுமத்துவதா? - சென்னை உயர் நீதிமன்ற கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் மேல் முறையீடு

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் தவறில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அ.தி.மு.க வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என கூறினர். 

தேர்தல் நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் தவறில்லை என்றும் கடுமையாக குற்றம் சாட்டினர்.

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு செய்துள்ளது. 

கொரோனா தொற்று நோயின் கொடிய இரண்டாவது அலைக்கு மத்தியில் வாக்கெடுப்புகளை நடத்தியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்துக்கள், தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்தும் கருத்துக்கள் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

மேலும் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்படும் கருத்துக்களை வெளியிடுவதற்கு ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் கூறி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மனுவானது, நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment