அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவராக சஹீட் நியமனம் - துறைமுக நகர சட்ட மூலத்திற்கு எதிராக அனைவரும் வாக்களிக்கவும், மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவராக சஹீட் நியமனம் - துறைமுக நகர சட்ட மூலத்திற்கு எதிராக அனைவரும் வாக்களிக்கவும், மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை

அகில இலங்­கை மக்கள் காங்­கி­ரஸின் பதில் தலை­வ­ராக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம்.சஹீட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

கட்­சியின் தலை­வரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான றிசாத் பதி­யுதீன், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு குற்றப் புலனாய்வு பிரிவில் 90 நாட்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

இவர் விடு­தலை செய்­யப்­படும் வரை கட்­சியின் நட­வ­டிக்­கை­களை வினைத்­தி­ற­னாக முன்­னெ­டுப்­ப­தற்கு தேவை­யான சில அதிகாரங்களை வழங்கும் நோக்­கி­லேயே இந்த நிய­மனம் வழங்குவதற்­கான தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்பீடம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் கூடியபோதே பதில் தலைவர் தொடர்­பான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

“கட்­சியின் தலைவர் றிசாத் பதி­யு­தீனின் ஆலோ­ச­னை­யு­ட­னேயே இந்த நிய­மனம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­து. இது­ தற்­கா­லி­க­மா­னது” என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் சட்ட ஆலோ­சகர் றுஸ்தி ஹபீப் தெரி­வித்தார்.

இத­னி­டையே, விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள துறை­முக நகர் சட்ட மூலத்­திற்கு எதி­ராக கட்­சியின் நான்கு பாராளுமன்ற உறுப்­பி­னர்­களும் வாக்­க­ளிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் குறித்த உயர்­பீட கூட்­டத்­தின்­போது தீர்மா­னித்­துள்­ளது.

20ஆவது திருத்தச் சட்ட மூல வாக்­கெ­டுப்பின் போது கட்சி உறுப்பினர்கள் ஆத­ர­வா­கவும், எதி­ரா­கவும் வாக்­க­ளித்தது போன்றல்லாமல் இந்த வாக்­கெ­டுப்பின் போது அனைத்து பாராளுமன்ற உறுப்­பி­னர்­களும் ஒற்­று­மை­யாக எதிர்த்து வாக்களித்து துறை­முக நகர் சட்ட மூலத்­தினை தோற்­க­டிப்­பது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

கட்­சியின் இந்த தீர்­மா­னத்­தினை மீறி செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதிராக ஒழு­காற்று நட­வ­டிக்கை எடுக்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, 20ஆவது திருத்தச் சட்­டத்திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த கட்­சியின் மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்குள் தங்­களின் விளக்­கங்­களை தனித் தனி­யாக எழுத்து மூலம் வழங்குமாறும் கட்சியின் அரசியல் உயர் பீடம் உத்தரவிட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி றஹீம் மற்றும் எம்.எம்.முஷாரப் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Vidivelli

No comments:

Post a Comment