நந்திகிராமில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை - அறிவித்தது தேர்தல் ஆணையம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, May 4, 2021

demo-image

நந்திகிராமில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை - அறிவித்தது தேர்தல் ஆணையம்

202105032343132192_In-Nandigram-where-Mamata-Banerjee-contested-the-votes_SECVPF
மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். இவர், மம்தாவை காட்டிலும் 1,736 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘மாநிலத்தில் நான்கில் மூன்று என்ற வீதத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அப்படியிருக்கும் போது நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்கிறார் என்றால், அங்கு முறைகேடு நடந்துள்ளது என்பது தெரிய வருகிறது’ என்றார்.

இதற்கிடையே நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் தனது கோரிக்கையை ஏற்று அங்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்கு எண்ணிக்கை மிக சரியாக நடைபெற்றது என்றும், நந்திகிராமில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்துவிட்டது.

இதையடுத்து, மம்தா பானர்ஜி நீதிமன்றத்துக்கு செல்லும் முடிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *