இலங்கையில் இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன - News View

About Us

Add+Banner

Monday, May 3, 2021

demo-image

இலங்கையில் இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

Curfew-2
கொழும்பு, நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, மற்றும் களுத்துறை மாவட்டங்களின் ஒன்பது கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்பட்டுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின், நோர்வூட் பொலிஸ் பிரிவில் இன்ஜஸ்றி கிராம சேவகர் பிரிவும், ஹற்றன் பொலிஸ் பிரிவில் போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அததுடன், கம்பஹா மாவட்டத்தின், கடவத்தை பொலிஸ் பிரிவின், எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின், இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் கங்குல்விட்டி கிராம சேவகர் பிரிவும் இறக்குவானை பொலிஸ் பிரிவின், பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவும், களவான பொலிஸ் பிரிவின் ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில், மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவின், வில்லோர தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில், தொடங்கொட பொலிஸ் பிரிவின், போம்புவல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *