இலங்கைக்கு கடந்த ஏப்ரல் மாதம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

இலங்கைக்கு கடந்த ஏப்ரல் மாதம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்கள்

எம்.மனோசித்ரா

இலங்கைக்கு கடந்த ஏப்ரல் மாதம் வருகை தந்த சுற்றுலா பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

அதற்கமைய ஏப்ரலில் இந்தியாவிலிருந்து 796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இந்தியா, சீனா, கசகஸ்தான், ஜேர்மன், பிரித்தானியா, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, சுவிஸ் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளிலிருந்து 4,168 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து 796 பேரும், சீனாவிலிருந்து 475 பேரும், கசகஸ்தானிலிருந்து 440 பேரும், ஜேர்மனிலிருந்து 383 பேரும், பிரித்தானியாவிலிருந்து 334 பேரும், அமெரிக்காவிலிருந்து 248 பேரும், ரஷ்யாவிலிருந்து 173 பேரும், கனடாவிலிருந்து 144 பேரும், சுவிஸிலிருந்து 93 பேரும், பிரான்சிலிருந்து 84 பேரும் இவ்வாறு கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஜனவரியில் 1,682 சுற்றுலா பயணிகளும், பெப்ரவரியில் 3,366 சுற்றுலா பயணிகளும், மார்ச்சில் 4,581 சுற்றுலா பயணிகளும், ஏப்ரலில் 4168 சுற்றுலா பயணிகளும் என இவ்வருடத்தில் 13,797 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment