கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் விமானக் குண்டு மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் விமானக் குண்டு மீட்பு

கிளிநொச்சி - உருத்திரபுரம், சிவநகரில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தினால் வீசப்பட்ட குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

உருத்திரபுரம் பகுதியிலுள்ள காணியொன்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள், குறித்த குண்டை அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் படையினர் இணைந்து, குண்டை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த குண்டை, பாதுகாப்பாக செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment