மாநிலங்களவை எம்.பி. ரகுநாத் மோஹபத்ரா கொரோனாவுக்கு பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

மாநிலங்களவை எம்.பி. ரகுநாத் மோஹபத்ரா கொரோனாவுக்கு பலி

புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலங்களை எம்.பி. ரகுநாத் மோஹபத்ரா, இன்று உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம் புரியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர், சிற்பி ரகுநாத் மோஹபத்ரா. கடந்த 1943ஆம் ஆண்டு பிறந்த இவர், 1975ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும், 2001 இல் பத்ம பூஷன் விருதையும், 2013 இல் பத்ம விபூசன் விருதையும் வென்றவர்.

ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 

இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment