மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 112 கொரோனா தொற்றாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 112 கொரோனா தொற்றாளர்கள்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28.05.2021) 112 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோரும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும் களுவான்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் , ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும்பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும் வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும் வெள்ளாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01 பேருமாக மொத்தம் 112 பேருமாக கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment