சுகாதார தொண்டர்கள் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் - அங்கஜனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

சுகாதார தொண்டர்கள் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் - அங்கஜனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்

யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். தமது போராட்டத்தைப் பல்வேறு இன்னல்கள், அசௌகரியங்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த நிரந்தர நியமனம் அற்ற சுகாதார தொண்டர்கள் தொடர்பில் பல்வேறு உயர்தரப்பினருடன் கலந்துரையாடி வந்த யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் இன்றையதினம் (01) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத் தொடரில் இந்த சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் கூறி இந்த தொண்டர்களுக்கான தீர்வை தருமாறு கேட்டிருந்தார். 

இந்த விடயத்தை பற்றி கேட்டறிந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ புதிய அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வரும் “சுபீட்சத்தின் சநோக்கு” செயற்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்க்கு அமைய சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மகிந்தான அளுத்கமக்கேயையும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனையும் சந்தித்த சுகாதார தொண்டர்கள் தங்களது நியமனம் தொடர்பில் சந்தித்து தங்களின் நியாயங்களை கூறினர். 

இச்சமயம் இது தொடர்பில் தாம் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து சுகாதார தொண்டர்களின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்திப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்வதாக அமைச்சர் மற்றும் அங்கஜன் உறுதியளித்திருந்தனர். 

அதற்கிணங்க அந்த சந்திப்பும் நடைபெற்று தற்போது ஜனதிபதியுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment