ஆளும் கட்சிக்குள் குழப்பம், ஒரு சில உறுப்பினர்கள் வழக்கு தொடரத் தீர்மானம் - காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் லொக்குகே - News View
  • Home
  • about us
  • contact us

News View

About Us

About Us
    • உள்நாடு
    • அரசியல்
    • கல்வி
    • வெளிநாடு
    • விளையாட்டு
    • தொழிநுட்பம்
    • கட்டுரைகள்
    • சினிமா

    Breaking

    Thursday, April 1, 2021

    Home அரசியல் ஆளும் கட்சிக்குள் குழப்பம், ஒரு சில உறுப்பினர்கள் வழக்கு தொடரத் தீர்மானம் - காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் லொக்குகே

    ஆளும் கட்சிக்குள் குழப்பம், ஒரு சில உறுப்பினர்கள் வழக்கு தொடரத் தீர்மானம் - காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் லொக்குகே

    Newsview April 01, 2021 அரசியல்,
    (இராஜதுரை ஹஷான்)

    மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணய விவகாரம், தேர்தல் முறைமை உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சிகளில் பெரும்பாலானோர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

    மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் மாகாண சபை தேர்தல் குறித்து முன்வைத்த யோசனை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்குமாறு குறிப்பிடப்பட்டடுள்ளது.

    மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்கள்.

    மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என குறிப்பிட்டு ஆளும் தரப்பினர் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணயம், தேர்தல் முறைமை ஆகிய காரணிகளை முன்வைத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

    பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பரிசீலனை செய்யப்படும்.

    உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றிருந்தால் தற்போது இந்த நெருக்கடி நிலை தோற்றம் பெற்றிருக்காது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபையின் நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது .

    புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் குறித்து கவனம் செலுத்துமாறு மகாசங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள். இந்த யோசனை தொடர்பில் ஜனாதிபதி மகாசங்கத்தினருடன் இடம்பெறும் சந்திப்பின் போது தீர்மானத்தை அறிவிப்பார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு

    மாகாண சபைத் தேர்தலை அரசியல் காரணிகளுக்காக பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. மாகாண சபைத் தேர்தல் எத்தேர்தல் முறையில், எப்போது இடம்பெற்றாலும் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் பெற்றி பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.

    Tags # அரசியல்
    Share This
    Author Image

    About Newsview

    அரசியல்
    Author - Newsview at April 01, 2021
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags அரசியல்

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Author Details

    Variables / Comments

    • disqusShortname
    • commentsSystem

    Entertainment

    TrendsTen
    all right reserved. develop by max mithun khan. Powered by Blogger.

    Labels

    • அரசியல்
    • உள்நாடு
    • கட்டுரைகள்
    • கல்வி
    • சினிமா
    • தொழிநுட்பம்
    • விளையாட்டு
    • வெளிநாடு

    Follow Us On Facebook

    Eastern CM Speech

    popular

    • எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
      எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
      மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எர...
    • தேர்தலில் போட்டியிட்ட 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாள
      தேர்தலில் போட்டியிட்ட 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாள
      (எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஆனால் இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்...
    • இலங்கை பங்குச் சந்தையில் முதன் முறை சாதனை
      இலங்கை பங்குச் சந்தையில் முதன் முறை சாதனை
      கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 18,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இலங்க...
    • வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 சிறார்கள் : ஒப்பந்தக்கார பெண்மணி பொலிசாரால் கைது
      வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 சிறார்கள் : ஒப்பந்தக்கார பெண்மணி பொலிசாரால் கைது
      உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் சுகவீனமுற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இன்று (30) மட்டக்களப்பு - கரடியனாறு ஆரம்ப பாடசாலையில் குறித்த சம்ப...
    • “பாஸ்போர்ட்” பெறுவதற்கு மீண்டும் டோக்கன் முறை
      “பாஸ்போர்ட்” பெறுவதற்கு மீண்டும் டோக்கன் முறை
      கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக இனிமேல் டோக்கன் வழங்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.  ஜூலை 02 ஆம் திக...

    Pages

    Total Pageviews

    Contact Form

    Name

    Email *

    Message *

    All Right Reserved by News Views | Design by Max Mithun Khan
    All Rights Reserved By News View | Design by max mithun khan