இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மீதான விசேட வர்த்தக வரி ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு (27) முதல் அமுலாகும் வகையில், இறக்குமதியாகும் உருளைக் கிழங்கின் மீதான குறித்த வரி, ஒரு கிலோ கிராமுக்கு ரூபா 50 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உருளைக் கிழங்கு விளைச்சல் அறுவடை ஆரம்பமாகியுள்ளதாலும், இம்முறை அதிக விளைச்சல் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாலும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment