கொழும்பிலிருந்து வெளியேறுகின்ற தூரப் போக்குவரத்து சேவை பஸ்களில் இன்று முதல் சிவில் உடையுடன் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பஸ் சாரதிமார் வாகனங்களை செலுத்துவதை கண்காணிப்பதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் வாகன விபத்துகளினால் 7 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகமான விபத்துக்கள் மோட்டார் சைக்கில் விபத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பொலிசாரின் அறிக்கைகளின்படி, ஏப்ரல் 10 முதல் 20 வரையிலான காலப்பகுதிகளில் வாகன விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுகின்ற காலக்கெடு ஆக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment