வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர்

குடலிறக்க சத்திர சிகிச்சை காரணமாக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் பழனிச்சாமி குடலிறக்க சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று‌ அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குடலிறக்க சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சத்திர சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment