யாழில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரிடம் சிக்கினர் ! பெறுமதியான பொருட்களும் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 11, 2021

யாழில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரிடம் சிக்கினர் ! பெறுமதியான பொருட்களும் கைப்பற்றல்

யாழ். வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 15 மின் நீர்ப்பம்பிகள், வாகனங்கள் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மோட்டர், புள்ளுவெட்டி இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

காங்கேசன்துறை, தெல்லிப்பழை ஆகிய இடங்களைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யபட்டனர்.

விசாரணைகளின் போது சந்தேகநபர்களினால் கடந்த ஒன்றரை வருடங்களாக திருடப்பட்டு வந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹொட்டகச்சியின் வழிகாட்டலில் தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மெர்சான் இந்துக்கலா சில்வா மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சுமணசிறி தலைமையிலான பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment