குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கொத்மலை பகுதியில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கிலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று 22.04.2021 முற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 20 பேரும், ஆண் தொழிலாளர்களாவர்.

இவர்களில் 04 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment