விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை இலங்கைக்கு 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை - News View

About Us

About Us

Breaking

Monday, April 5, 2021

விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை இலங்கைக்கு 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்ட கடந்த ஜனவரி 21ஆம் திகதி முதல் கிட்டத்தட்ட 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கஜகஸ்தான், ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், உக்ரைன், ரஷ்யா, இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து மொத்தமாக 9 ஆயிரத்து 629 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்கும் தற்போதுள்ள விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தூதரகங்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

உலகளாவிய கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வருவதால் பல நாடுகள் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்க எதிர்பார்க்கும் நிலையில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிவாரணம் வழங்குவதற்கான கலந்துரையாடல்களும் நடைபெற்று வருவதாகவும் இலங்கையர்கள் நாட்டிற்குத் திரும்புவதற்கான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment