யாழ். செம்மணி மயானத்தில் ஆபத்தான வெடி பொருட்கள் - சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் படையினர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 7, 2021

யாழ். செம்மணி மயானத்தில் ஆபத்தான வெடி பொருட்கள் - சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் படையினர்

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடி மருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

இன்று (08) அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment