கொழும்பு-03 பகுதியில் செல்லுபடியாகும் விசா ஆவணங்கள் இல்லாத குற்றச்சாட்டுக்காக எட்டு தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் அடங்குவர்.
கோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவினைத் தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
இதற்கிடையில், நேற்று காவல்துறை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது விசா விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக மேலும் 9 வெளிநாட்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.
மூன்று நைஜீரியர்கள், நான்கு மாலதீவினரும், இரண்டு இந்தியர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.
No comments:
Post a Comment