’என்னை கொன்று விடுங்கள்’ - துப்பாக்கி ஏந்திய பொலிஸாருக்கு முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

’என்னை கொன்று விடுங்கள்’ - துப்பாக்கி ஏந்திய பொலிஸாருக்கு முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி

மியன்மாரில் குழந்தைகளை தாக்க வேண்டாம் என கூறி கன்னியாஸ்திரியொருவர் பொலிஸார் முன் மண்டியிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளதுடன் குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

மியன்மாரில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் 83 சதவீத வாக்குகளை பெற்று மீண்டுமொரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறி, இராணுவத்தால் ஆங் சாங் சூகியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், போராட்டத்தை கட்டுப்படுத்த அடக்கு முறையை இராணுவம் கையாண்டு வருகிறது.

போராட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் பொலிஸாரிடம் மண்டியிட்டு மன்றாடும் கன்னியாஸ்திரி ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாஸ்திரியான ஆன் ரோஸ் நு என்பவர் பொலிஸாரிடம் மண்டியிட்டு கைகூப்பி குழந்தைகளுக்கு எதிராகவும், குடியிருப்பு வாசிகளுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள் என கெஞ்சி வேண்டுவதாக அந்த புகைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான வீடியோ ஒன்றையும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. ஆனால் அவர் மண்டியிட்டு வேண்டிக் கொண்ட அடுத்த சில மணிகளில் துப்பாக்கிச் சத்தம் கேட்கத் தொடங்கியதாகவும், அந்த இடம் இரத்தம் படிந்து விட்டதாகவும் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு தொலைபேசியில் பேசிய கன்னியாஸ்திரி, யாரையும் காயப்படுத்த வேண்டாமென நான் பொலிஸாரை கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். குடும்ப உறுப்பினர்களை போல பாவியுங்கள் என கேட்டுக் கொண்டேன். உறுதி அளியுங்கள். அல்லது என்னை கொன்று விடுங்கள் என்று கூறினேன். ஆனால் துப்பாக்கிச் சத்தம் எனக்கு கேட்டது. வீதிகளில் இரத்தம் ஓடியது” எனக் கூறினார்.

No comments:

Post a Comment