பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் காலீதா ஸியாவின் சிறைத் தண்டனை ரத்தா? - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் காலீதா ஸியாவின் சிறைத் தண்டனை ரத்தா?

பங்களாதேஷத்தின் முன்னாள் பிரதமர் காலீதா ஸியாவிற்கு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பங்களாதேஷத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஸியா (வயது 74). 3 முறை பிரதமர் பதவி வகித்த இவருக்கு, 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ம் திகதி ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு உடல் நலத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம், மேலும் 6 மாதம் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. இது வரும் 25ம் திகதி முடிகிறது.

அவர் உள்நாட்டில் சிகிச்சை பெறலாம், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பது ஜாமீன் நிபந்தனை ஆகும்.

தற்போது அவரது உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு தண்டனையை ரத்து செய்வது குறித்து பங்களாதேஷத்தின் ஷேக் ஹசினா அரசு பரிசீலனை செய்கிறது.

இது குறித்து அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் அசதுஸ்ஸமான் கான் கமல் கூறுகையில், “பங்களாதேஷ தேசியவாத கட்சியின் தலைவர் கலீதா ஸியாவின் தண்டனையை ரத்து செய்து, விடுவிப்பது குறித்து சட்ட அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். 

இதையொட்டி அவரது சகோதரர் சமீம் இஸ்கந்தரிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்” என தெரிவித்தார்.

இதனால் கலீதா ஸியாவின் தண்டனை ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு அங்கு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment