இவ்வருட ரமழானுக்காக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்கு 75 மெற்ரிக் தொன் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இப்பேரீத்தம் பழங்கள் பள்ளிவாசல்கள் மூலம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
கிடைக்கப் பெற்றுள்ள பேரீத்தம் பழங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
கடந்த வருடம் இலங்கைக்கு நன்கொடையாக 150 மெற்ரிக் தொன் கிடைக்கப் பெற்தாகவும் தெரிவித்த பணிப்பாளர், இம்முறை அதில் அரைவாசியே கிடைத்துள்ளதாகவும் நோன்புக்கு முன்னர் இவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறினார்.
Vidivelli
No comments:
Post a Comment