மியன்மாரில் வர்த்தகங்கள் மூடப்பட்டு மக்கள் வீடுகளில் தங்கி நடத்திய அமைதிப் போராட்டத்திற்குப் பின்னர் நேற்று ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் மீண்டும் வீதிகளுக்கு இறங்கியுள்ளனர்.
வர்த்தக நகரான யாங்கோன், மத்திய நகரான மொனிவா மற்றும் மேலும் பல சிறு நகரங்கள் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மௌலமினே நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்ற பொலிஸார் 20 பேரை கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது குறைந்தது இருவர் காயமடைந்துள்ளனர்.
பெப்ரவரி 1 சதித்திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை நசுக்கும் முயற்சிகளில் மியன்மாரின் பாதுகாப்பு படையினர் இதுவரை 300 க்கும் மேற்பட்ட நபர்களை கொலை செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் கால் பகுதியினர் தலையில் துப்பாக்கி சூட்டுக்குள்ளாகியுள்ளனர் என்று மியன்மாரின் வழக்கறிஞர்கள் குழுவொன்றும் அந்நாட்டு ஊடகங்களும் தகவல் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 164 எதிர்ப்பாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையின் 9 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஆட்சிக்குழு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த கொடும் செயல்கள் உலக நாடுகளிடம் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளிலிருந்து மியன்மாருக்கு எதிராக சில பொருளாதாரத் தடைகளைத் தூண்டின.
பொதுமக்களுக்கு எதிராக ஆபத்தான சக்தியைப் பயன்படுத்துவது சில தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளால் கண்டிக்கப்பட்டது.
"மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தினமும் செய்யப்படுகின்றன," என்று அரசியல் கைதிகளுக்கான இலாப நோக்கற்ற உதவி சங்கம் (AAPP) தெரிவித்துள்ளது.
மேலும் சதித்திட்டத்திலிருந்து 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் 25 க்குள் 320 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் குறத்த சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
No comments:
Post a Comment