பத்து ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தியது ஜப்பான் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தியது ஜப்பான்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டைத் தாக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 20,000 பேருக்கு ஜப்பான் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தியது.

இந்த நில நடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் கடலோர நகரங்களை அழித்துடன், உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவைத் தூண்டியது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 2.46 மணிக்கு (05:46 GMT) ஜப்பான் முழுவதும் உள்ள மக்கள் ஒரு நிமிடம் மெளனம் காத்தனர்.

மக்கள், சிலர் பூங்கொத்துகளை ஏற்றிக் கொண்டு, சுனாமியால் உயிரிழந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காக கடற்கரை மற்றும் கல்லறைகளில் கூடியிருந்தனர்.

அதேநேரத்தில் ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் நடந்த நினைவு விழாவில் பேரரசர் நருஹிட்டோ மற்றும் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் இறந்தவர்களுக்கான நினைவிடத்தில் இணைந்தனர்.

நகரின் தேசிய அரங்கில் பேசிய பேரரசர் நருஹிட்டோ, “சோகத்தின் மறக்க முடியாத நினைவு” ஒரு தசாப்த காலமாக நீடித்தது என்றார்.

பாதிக்கப்பட்டவர்களில் பலர், அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரும் சேதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் ஏராளமான கஷ்டங்களை வென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

2011 மார்ச் 11 அன்று ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நடுக்கம் ஒரு பெரிய சுனாமியைத் தூண்டியது, இது புகுஷிமா டாயிச்சி அணுமின் நிலையத்தை தாக்கி, 160,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கதிர்வீச்சு அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறவும் வழிவகுத்தது. இதனால் 15,900 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,525 பேர் காணாமல் போயினர். 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 3,775 பேர் உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பேரழிவு தொடர்பான பிற சிக்கல்களால் பின்னர் இறந்து விட்டதாக அரசாங்கம் கூறியது.

No comments:

Post a Comment