யாழில் சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட வாள் வெட்டுக் குழு சந்தேகநபர் கைது! - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

யாழில் சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட வாள் வெட்டுக் குழு சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட வாள் வெட்டுக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திர தினத்தினை முன்னிட்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் யாழில் (வியாழக்கிழமை) பேரணி ஒன்று நடைபெற்றது.

குறித்த பேரணியில், வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த இருவர் கலந்து கொண்டுள்ளார்கள் என யாழ்ப்பாண குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, பேரணியில் கலந்துகொண்ட இருவரையும் கைது செய்வதற்குப் பொலிஸார் முயற்சித்த வேளை ஒருவர் தப்பி சென்றுள்ளார். மற்றையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment