கொரோனா வைரஸுடன் போராடும் சுகாதார சேவை ஊழியர்களுக்காக மில்லியன் கணக்கான பவுண்ட்களை திரட்டுவதன் மூலம் தனது நிலையை மேலும் உயர்த்திய இரண்டாம் உலகப் போர் வீரரான பிரிட்டனின் கேப்டன் டாம் மூர் காலமானார்.
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே டாம் மூர் தனது 100 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
தேசிய சுகாதார சேவைக்காக 38.9 மில்லியன் பவுண்ட்கள் (53 மில்லியன் அமெரிக்க டொலர்) திரட்ட வீட்டில் இருக்கும் 25 மீட்டர் நீள தோட்டத்தில் 100 தடவை நடந்து, நன்கொடையாக திரட்டினார்.
"எங்கள் அன்பான தந்தை கேப்டன் டாம் மூரின் மரணத்தை நாங்கள் அறிவிப்பது மிகுந்த சோகத்துடன் உள்ளது" என்று அவரது மகள்கள் செவ்வாய்க்கிழமை காலை மத்திய இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட் மருத்துவமனையில் இறந்ததைத் தொடர்ந்து ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர் புரோஸ்டேட் மற்றும் தோல் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவர் நிமோனியாவை எதிர்த்துப் போராடினார், ஜனவரி 22 ஆம் திகதி கொவிட்-19 க்கு நேர்மறை பரிசோதனை செய்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவர் எடுத்துக் கொண்ட ஏனைய மருந்துகள் காரணமாக அவருக்கு தடுப்பூசி செலுத்த முடியாது போனதாகவும் குடும்பத்தார் மேலும் கூறினார்.
இந்நிலையில் உயிரிழந்த டாம் மூருக்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது இரங்கல் செய்தியில், டாம் மூர் ஒரு ஹீரோ என்றும் உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத், அரச குடும்பத்தின் சார்பில் டாம் மூரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இவரது மறைவுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment