முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்கிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு! - News View

About Us

About Us

Breaking

Sunday, February 21, 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்கிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக்கிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ஹூனைஸ் பாரூக்கின் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்றிருந்த மன்னார் பொலிஸார் வாக்கு மூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

பேரணியில் கலந்துகொண்டபோது, நீதிமன்றக் கட்டளை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை கவனத்தில் கொள்ளப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துகொண்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கடந்த இரண்டு தினங்களாக மன்னார் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்து வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், முஸ்லிம்களின் ஜனாசா எரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் அபகரிப்பு உட்பட சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு இவற்றைக் கொண்டுசெல்லும் வகையிலுமே, வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment