தமிழகத்தின் இராணுவ தயாரிப்புகள் லடாக்கில் உள்ள நமது எல்லைகளை பாதுகாக்கும் - பல்வேறு நலத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி - News View

About Us

About Us

Breaking

Sunday, February 14, 2021

தமிழகத்தின் இராணுவ தயாரிப்புகள் லடாக்கில் உள்ள நமது எல்லைகளை பாதுகாக்கும் - பல்வேறு நலத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி

தமிழ் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நாட்டின் வடக்கு எல்லையில் பயன்படுத்தப்பட இருக்கிறது. தமிழகத்தின் இராணுவ தயாரிப்புகள் லடாக்கில் உள்ள நமது எல்லைகளை பாதுகாக்கும் என்பதே பெருமை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

பல்வேறு நலத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக நேற்று ஒருநாள் அரச விஜயமாக இந்தியப் பிரதமர் மோடி சென்னைக்கு சென்றிருந்தார்.

நேரு உள்ளக விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்திய ரூபா மதிப்பில் 8 ஆயிரம் கோடி செலவில் பல திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர் உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மோடி மேலும் உரையாற்றுகையில், வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ் நாடு, நான் சென்னை வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு அனைவருக்கும் நன்றி. ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள புதிய முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

நாம் 636 கிலோ மீற்றர் நீளம் கொண்ட கல்லணை கால்வாய் அமைப்பை புதுப்பித்து நவீனமாக்குவதற்காக அடிக்கல் நாட்டி உள்ளோம். இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கப் போகிறது. நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும், குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பயன்பெறும்.

சாதனை படைக்கும் வகையில் உணவு தானிய உற்பத்தி செய்தமைக்கும், நீர் ஆதாரங்களை பயன்படுத்தியதற்கு நான் தமிழ் நாடு விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவராலும் போற்றப்படும் ஔவையார் பாடலில் ‘‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்’’ என்று கூறி உள்ளார்.

நீர் உயரும் போது சக குடி உயரும். நாடு வளம் பெறும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தண்ணீர் துளியையும் நாம் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். இது இந்த நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல. உலகளாவிய பிரச்சினை. இதனால் நாம் நீர் ஆதாரங்களையும், நீரையும் பாதுகாக்க வேண்டும்.

வண்ணாரப் பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை 9.05 கிலோ மீற்றர் நீளம் உள்ள மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத்தை நாம் ஆரம்பித்து இருக்கிறோம். சிவில் கட்டுமானங்களை இந்திய நிறுவனங்களே மேற்கொண்டன.

சென்னை மெட்ரோ விரிவாக்கம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் வலை பின்னல் 54 கிலோ மீற்றராக உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 119 கிலோ மீற்றர் நீளம் உள்ள மெட்ரோ திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நகரத்துக்கு அளிக்கப்படும் மாபெரும் திட்டங்களில் இதுவும் ஒன்று. நகர்புறத்திலும் மீதான போக்கு வரத்து புவி மையம் இங்கு இருக்கும் மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும்.

சென்னை கடற்கரை - அத்திப்பட்டு மார்க்கம் அதிக பயண நெரிசல் மிக்கதாகும். சென்னை துறைமுகத்துக்கும் - காமராஜர் துறைமுகத்துக்கும் சரக்கு போக்கு வரத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டி இருந்தது. இதற்கு சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையேயான நான்கு ரயில் வழித்தட பாதை பேருதவியாக இருக்கும்.

விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர் ரெயில் திட்டத்தை மின்மயமாக்கி இருப்பது டெல்டா மாவட்டங்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். இந்த 228 கிலோ மீற்றர் நீளம் உள்ள ரயில்வே தடம் மிகப்பெரிய பயன்களில் ஒன்று. உணவு தானியங்களின் விரைவான போக்குவரத்துகளில் ஒன்று.

இன்றைய நாளில் நடந்த துர்பாக்கிய சம்பவத்தை மறந்துவிட முடியாது. அது புல்வாமா தாக்குதல். நமது படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

உலகிலேயே தொன்மை மொழியான தமிழின் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதி இருக்கும் வரி. ஆயுதம் செய்வோம். நல்ல காகிதம் செய்வோம். ஆலைகளை செய்வோம். காகிதங்களை செய்வோம். கல்வி, நிறுவனங்களை செய்வோம். உலகை உலுக்கும் கப்பல்களை செய்வோம் என்று கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நாட்டின் வடக்கு எல்லையில் பயன்படுத்தப்பட இருக்கிறது. ‘அர்ஜுன் பீரங்கி’ தயாரிப்பின் மூலம் பீரங்கி உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்கிறது. தமிழகத்தின் இராணுவ தயாரிப்புகள் லடாக்கில் உள்ள நமது எல்லைகளை பாதுகாக்கும் என்பதே பெருமை.

தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என இனி அழைக்கப்படுவர்.

கடற்பாசி வளர்ப்புக்கு தமிழகத்துக்கு என புதிய பூங்கா உருவாக்கப்படும்.

ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள புதிய முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவிக்கரமாக இருக்கும். சென்னை ஐ.ஐ.டி. டிஸ்கவரி வளாகம் உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையத்தை கொண்டிருக்கும்.

மீனவர்களுக்கு கூடுதலாக கடன் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. மீனவர்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. அவர்களுக்கான கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் இந்தியாவில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா சமூக பொது உள்கட்டமைப்புகளை அதிவிரைவாக மேம்படுத்தி வருகிறது.

இதேவேளை, நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா நிறைவடைந்த பின் சுமார் 10 நிமிடங்கள் தனியாக பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழாவில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்று பேசினர்.

விழா முடிவில் பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர், நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா நிறைவடைந்த பின் சுமார் 10 நிமிடங்கள் தனியாக பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் உடனான முதல்வரின் ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment