வவுனியாவில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 4, 2021

வவுனியாவில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருக்கலம் கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், பொலிசாருக்கும் தெரியப்படுத்தினார்.

குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் பொலிசார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவரது தலைப் பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment