காத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

காத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதான, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, மோதினார் ஒழுங்கை, கபூர் வீதி, சின்னதோனா வீதி, ரெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு தெரு என்பன நாளை அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இதன் மூலம் காத்தான்குடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த டிசம்பரம் 31ஆம் திகதி முதல் காத்தான்குடி பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 21ஆம் திகதி காத்தான்குடியின் 8 கிராம அலுவலர் பிரிவுகளும், அதன் பின்னர், 40 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கடந்த பெப்ரவரி 09ஆம் திகதியும் என, இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்ட நிலையில், 4 வீதிகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது, குறித்த 4 வீதிகளும் நாளை (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

(எம்.எஸ்.எம். நூர்தீன்)

No comments:

Post a Comment