உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இதனை தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விற்றர் கணக்குகளில் அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதில் அவர், அனைத்து நல்ல விடயங்களும் என்றோ ஒரு நாள் முடிவுக்கு வர வேண்டும் என்ற வகையில், தனது 15 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை இத்துடன் நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உள்ளிட்ட தன் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தற்போது 36 வயதான உபுல் தரங்க, 235 ஒருநாள் போட்டிகளில் 6,951 ஓட்டங்களையும், 31 டெஸ்ட் போட்டிகளில் 1,754 ஓட்டகளையும், 26 ரி20 போட்டிகளில் 407 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் முதல் போட்டியில் விளையாடிய உபுல் தரங்க, இறுதியாக கடந்த 20019ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment