கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சவுதி அரேபியா பொழுது போக்கு நடவடிக்கைகள், கூட்டங்கள் மற்றும் உணவருந்தும் உணவக சேவைகளுக்கு 20 நாட்கள் கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளதாக உள்துறை அமைச்சக அறிக்கையை மேற்கோளிட்டு அந் நாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
இந்த அறிவிப்பு 10 நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பை நீட்டிக்கிறது.
மேலும் சினிமா மற்றும் உட்புற விளையாட்டு மைய மூடல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
சவுதி அரேபிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சவுதி குடிமக்கள், இராஜதந்திரிகள், மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைத் தவிர 20 நாடுகளில் இருந்து இராஜ்யத்திற்குள் நுழைவதை சவுதி இடைநிறுத்தியது.
ஆறு வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய மற்றும் அரபு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான இந்த இராச்சியம் சனிக்கிழமையன்று 337 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளையும் நான்கு இறப்புகளையும் பதிவு செய்தது.
No comments:
Post a Comment