வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா கனகராஜன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குழவிசுட்டான் வயல் பகுதியில் மின்சாரத்தில் அகப்பட்டு காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

குழவிசுட்டான் தெகிழ்பழந்தான் பகுதியில் உள்ள வயல் பகுதியில் யானையின் சடலம் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் கனகராயன் குளம் பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர். 

இந்நிலையில், இராணுவம், பொலிசார், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் வேளாண்மை செய்து வந்திருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைகளுக்காக அழைத்து சென்றிருந்தனர்.

யானையின் சடலம் துர்நாற்றம் வீசுவதால் பல நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment