(எம்.மனோசித்ரா)
கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 15,000 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நேற்று செவ்வாய்கிழமை மாத்திரம் 2254 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு - நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலை பணியாளர்களுக்கும், குண்டசாலையிலுள்ள பொலிஸ் வைத்தியசாலை பணியாளர்களுக்கும் ஆரம்ப கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட்டது. அதற்கமைய இதுவரையில் 15,331 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் வைத்தியசாலைகளிலுள்ள பணியாளர்களுக்கு ஆரம்ப கட்டமாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன், நேரடியாக பொலிஸ் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment