பஸ் விபத்தில் 14 பேர் பலி - 9 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

பஸ் விபத்தில் 14 பேர் பலி - 9 பேர் காயம்

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் பஞ்ச்குர் என்ற இடத்தில் இருந்து சிந்து மாகாணத்தின் கராச்சிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

பஸ் குவெட்டா- கராச்சி நெடுஞ்சாலையில் உதால் என்ற இடத்தில் வரும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 5 பெண்கள், 2 குழந்தைகள், 7 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர். 

காயம் அடைந்தவர்கள் உதால் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் கராச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அதிகமான பனிப்பொழிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment