(சர்ஜுன் லாபீர்)
சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனம் (FIFA) இன்று வெளியிட்ட இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட சர்வதேச நடுவர்களுக்கான (FIFA International Referees 2021) பெயர் பட்டியலில் இலங்கையிலிருந்து தெரிவான ஆறு (06) சர்வதேச நடுவர்களில் கல்முனையைச் சேர்ந்த "ஜப்ரான் ஆதம்பாவாவும்" தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
கடுமையான தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் கொண்ட இவர் தன்னுடைய இலக்கின் முதற்படியை சுவைத்திருக்கின்றார்.
இவர் கல்முனை சாஹிரா கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment