ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பு என அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கயந்த கருணாதிலகவுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுயமாக முன்வந்து குடும்பத்தினருடன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனையின் முடிவின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுக்கும் அவரது குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
2021 ஜனவரி 5 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புடையவராக அடையாளம் காணப்பட்ட 15 பேர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment