சுய தனிமைப்படுத்திக் கொண்ட கல்முனை பிரதேச மக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

சுய தனிமைப்படுத்திக் கொண்ட கல்முனை பிரதேச மக்கள்


(சர்ஜுன் லாபீர்)

கல்முனை கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை செய்லான் வீதி முதல் சாஹிரா கல்லூரி வீதி வரை இன்று (02.01.2021) பிற்பகல் 6.00 மணியில் இருந்து மக்கள் தங்களை சுய தனினைப்படுத்திக் கொண்டதை காணக்கூடியதாக உள்ளது.

இப்பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும், வீதி போக்கு வரத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

இதனூடாக மக்கள் கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் வேண்டுகோளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

ஆனாலும் கடந்த 6 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள கல்முனை பிரதேச 11 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் அன்றாட தேவைகளை நிறைவு செய்வதில் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், குறித்த பிரதேசத்தின் அனைத்து உள்வீதிகளும் வீதித் தடைகள் போடப்பட்டு இராணுவத்தினரும் பொலிசாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment