ஜேர்மனியில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 20, 2021

ஜேர்மனியில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது

ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு பெப்ரவரி 1ம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஜேர்மனியில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 49 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

இதற்கிடையே, புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் ஜேர்மனியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ம் திகதி வரை ஊரடங்கு அமுலில் உள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியில் அமுலில் உள்ள முழு ஊரடங்கு பெப்ரவரி 14ம் திகதி வரை நீடிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முழு ஊரடங்கை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது என ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment