கேரளா கஞ்சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

கேரளா கஞ்சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கைது

வவுனியா செட்டிக்குளம் நகரில் நேற்று (08) மதியம் ஒரு கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பகுதியில் கேரளா கஞ்சாவினை தம்வசம் ஒருவர் வைத்திருப்பதாக செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 1 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

இதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்ததுடன் குறித்த செயற்பாட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 27 வயதுடைய நபர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் குறித்த செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் சந்தேகநபரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment