நேற்று 30.01.2021ம் திகதி இடம் பெற்ற காத்தான்குடி நகருக்கான கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த 10 கிராம சேவகர் பிரிவுகளுள் 167, 167E, 167C அகிய 03 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ச்சியாக முடக்க நிலைமையில் இருப்பதுடன் ஏனைய கிராம சேவகர் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட வீதிகள் பகுதியளவில் முடக்கப்பட்டிருக்கும்.
2. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளுக்குள்ளும் சகல வர்த்தக நிலையங்களும் வழமை போன்று திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், கடைகளுக்கு வெளியில் கைகளை தொற்று நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் சமூக இடைவெளியினை பேணுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வதுடன் கடைகளில் காணப்படும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருத்தல் வேண்டும்.
3. பாமசி தவிர்ந்த ஹோட்டல்கள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களும் இரவு 8.00 மணியுடன் மூடப்படல் வேண்டும்.
4. ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் பொதி செய்து மாத்திரம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, எந்த நிலையிலும் கடைகளுக்குள் இருந்து சாப்பிட எவரையும் அனுமதிக்கக் கூடாது.
5. வீடு, கட்டுமானப் பணிகள், அதனோடு தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோர் (மேசன், ஓடாவி மற்றும் ஏனைய கூலி தொழிலாளிகள்) மற்றும் வீதி வியாபாரத்தில் ஈடுபடுவேர் என அனைவரும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காத்தான்குடி நகர சபையினால் பொது விளையாட்டு மைதானத்தில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதனால் கட்டாயம் அனைவரும் பதிவு செய்தல் வேண்டுமென்பதுடன் மேற்படி நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
6. தனியார் கல்வி நிலையங்கள், மதரசாக்கள், குர்ஆன் மதரசாக்கள் மற்றும் பாலர் பாடசாலைகள் போன்றன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.
7. கடற்கரை, ஆற்றங்கரை போன்ற பொழுதுபோக்கு இடங்களில் கூடி நிற்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
8. மறு அறிவித்தல் வரை பொதுச் சந்தைகள் மூடப்பட்டிருக்கும்.
9. திருமண, வலிமா நிகழ்வுகள் நடாத்துவதும் மண்டபங்கள், விடுதி அறைகள் வாடகைக்கு விடுவதும் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானங்களை சகல பொதுமக்களும் கண்டிப்பாக பின்பற்றவும். மேலும் எமது ஊரில் இன்னும் சில பகுதிகள் தற்போதும் முடக்கப்பட்ட நிலைமையிலேயே காணப்படுகிறது.
எனவே இப்பிரதேசங்களை எதிர்காலத்தில் விடுவிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு தாங்கள் பின்பற்றுகின்ற சுகாதார நடைமுறைகளே கவனத்தில் கொள்ளப்படும் என்பதனை பொறுப்புடன் ஏற்று நடந்து கொள்ளுமாறும் இவற்றை பின்பற்றாத பொதுமக்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி,
இவ்வண்ணம்.
நகர முதல்வர், நகர சபை, காத்தான்குடி.
சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காத்தான்குடி.
No comments:
Post a Comment