பெரு நாட்டில் சீனாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

பெரு நாட்டில் சீனாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்

பெரு நாட்டில் சீனாவின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

அங்கு சீனாவின் சினோபார்ம் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகிறார்கள். அந்த தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் பெரு நாட்டில், சீனாவின் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு கைகளை அசைக்க முடியாத அளவுக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment