முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் காணப்படும் மண் கிணறு ஒன்றிலிருந்து மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த பெண் ஒருவர், குறித்த உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து அப்பகுதிக்கான கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொலிசார் குறித்த இடத்திற்கு வருகை தந்து உடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் சிவில் உடையில் இருக்கின்ற நபர்கள் உடலம் இருக்கின்ற பகுதியை புகைப்படம் எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment