சீ.பி.ரத்நாயக்க, ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ரமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

சீ.பி.ரத்நாயக்க, ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ரமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ரமேஷ்வரன் மற்றும் நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் கலந்து கொண்ட கூட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரபத்தன பிரதேச சபை தலைவர் கலந்து கொண்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச செயலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தலவாக்கல லிந்துலை நகர சபை தலைவர், செயலாளர் அந்த நகர சபை ஊழியர்கள் 10 பேர் மற்றும் பிரதேசத்தின் ஊடகவியலாளர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி எம்.கனேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி கண்டி பொல்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அக்கரபத்தன பிரதேச சபை தலைவர் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நுவரெலியா, கொட்டகலை, அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலிய ஆகிய பிரதேச சபை தலைவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தினகரன்

No comments:

Post a Comment