(செ.தேன்மொழி)
நீர்கொழும்பு - கட்டானை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையை சமாதானம் செய்ய முற்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரிச்சந்திரபுர பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 09.00 மணியளவில் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஹரிச்சந்திரபுர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட முரண்பாட்டை சமாதானம் செய்வதற்காக சென்ற பெண் திடீரென்று கீழே விழுந்துள்ளார்.
இதன்போது காயமடைந்த குறித்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்போது ஹரிச்சந்திரபுர பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment