பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா

பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

தனது மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த நிலையில் திரும்பிய 34 வயதுடைய குடும்பத் தலைவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் குடும்பத்துடன் கடந்த 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த குடும்பத் தலைவரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து அவர் யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படவுள்ளார். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 70 பேருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 336 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அவர்களில் ஒருவருக்கு மட்டும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment